தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப், முழு வெள்ளை உளுந்து - 4 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கொப்பரைத் தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வெள்ளை உளுந்து, துவரம்பருப்பு, கொப்பரைத் தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியுடன் கலக்கவும். இந்தப் பொடியை சாதத்தில் சேர்த்து... உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
No comments:
Post a Comment