தேவையானவை: நாட்டு பூண்டு - கால் கிலோ (தோலுரித்து, ஒன்றிரண்டாக நசுக்கிக்கொள்ளவும்), புளி - சிறிய எலுமிச்சை அளவு, மிள காய்த்தூள் - 2 டீஸ்பூன், பெங்களூர் தக்காளி - 2, கடுகு, - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பெங்களூர் தக்கா ளியுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். புளியை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அடிகனமான வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, நசுக்கிய பூண்டை சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும். அதில் புளிக்கரைசல், தக்காளி கலவையை சேர்த்துக் கொதிக்க விட்டு, நன்கு கிளறி எண்ணெய் பிரிந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.
No comments:
Post a Comment