தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், தேங்காய் - அரை மூடி (ஒரு கப் பால் எடுத்துக்கொள்ளவும்), பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டுப் பல் - 4, பச்சை மிளகாய் - 2, பட்டை - சிறு துண்டு, லவங்கம் - ஒன்று, வெங்காயம் - ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பெரிய வெங்காயத்தை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும், பட்டை, லவங்கம் தாளித்து... வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தேங்காய்ப் பால், முக்கால் கப் நீர், தேவையான உப்பு சேர்க்கவும். இதில் அரிசியைப் போட்டுக் கிளறி, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும், அடுப்பை `சிம்’மில் வைத்து, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கவும். கொத்த மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment